இலங்கை

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நன்கொடை!

  • March 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த 10 ஹெலிகொப்டர்களும் கடந்த மார்ச் 15ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டு எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஹெலிகொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தூதுவர் மஹிந்த சமரசிங்க, […]

அரசியல் இலங்கை

வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறிய கோட்டாபய!

  • March 17, 2026
  • 0 Comments

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று (17) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இலங்கை

போர் பதற்றம் : மீண்டும் QR முறைமை!

  • March 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு QR Code முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில்,   https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த […]

இலங்கை

இலங்கையில் ஆயுதங்களுடன் சிக்கிய படகு!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட படகு, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 5, 2026
  • 0 Comments

கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ‘கூகுள் படிவத்தை’ (Google Form) பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் தொடர்புகளைப் பேணுவதற்கும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், மக்கள் நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்குமே இந்தத் தரவு சேகரிப்பு நடத்தப்படுகிறது. தற்போதைய பிராந்திய பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

இலங்கை செய்தி

கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவல்

  • February 26, 2026
  • 0 Comments

வத்தளை, கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

  • February 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் […]

இலங்கை செய்தி

வரலாற்றில் முதன்முறையாக இலங்கை போக்குவரத்து சபையில் பெண் நடத்துநர்கள்

  • February 6, 2026
  • 0 Comments

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (6) நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, புதிதாக நியமிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் இலங்கையின் புதிய விசா அறிவிப்பு

  • January 22, 2026
  • 0 Comments

மாலத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம், சுற்றுலா அல்லது வருகை நோக்கங்களுக்காக இலங்கைக்கு செல்லும் மாலத்தீவு குடிமக்களுக்கு 90 நாட்கள் செல்லுபடியாகும் வருகை விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி, மாலத்தீவு நாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் செய்யும் முன் மின்னணு பயண அனுமதி (ETA) பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த விசா விலக்கு ஏற்பாடு, பயணிகளை எளிதாகப் பயணிக்க உதவும் என்றும், இலங்கை–மாலத்தீவு நாடுகளுக்கிடையிலான மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.