உலகம் செய்தி

ஈரானுக்கான தொடர் ஆதரவை உறுதிப்படுத்தியது சீனா!

  • May 6, 2026
  • 0 Comments

சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் பீஜிங்கில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விரும்புவதாகவும், அமெரிக்காவுடன் நியாயமான உடன்படிக்கையை எட்டத் தயாராக இருப்பதாகவும் சீனாவிடம், ஈரான் தெரியப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் சீனா செல்லவுள்ள நிலையிலேயே, ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi பீஜிங் பறந்து, முக்கிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். மே 14 ஆம் திகதி சீனா செல்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். மே 15 […]

இலங்கை செய்தி

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு குறித்து ஆராய்வு!

  • May 6, 2026
  • 0 Comments

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், இன்று (06) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தனர். வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் அரச ஊழியர்களின் நேர்மையைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அரசின் வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக […]

உலகம் செய்தி

ஈரான் நிபந்தனைகளை ஏற்காவிடின் உக்கிர தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!

  • May 6, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக் கொண்டால், போர் முடிவடையக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், ஈரான் இந்த உடன்படிக்கைக்கு இணங்கத் தவறினால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அடுத்தகட்ட முடிவே பிராந்தியத்தின் அமைதியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என அமெரிக்கா கருதுகின்றது. எனினும், அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு அடிபணியப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஈரான் உள்ளது. இரு […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்!

  • May 6, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக TVK தலைவர் விஜய் உள்ளிட்ட குழுவினர், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று சந்தித்தனர். இதன்போது தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். முதலில் விஜய்யை வரவேற்ற ஆளுநர் அர்லேகர், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். பதவியேற்பு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்திய நேரப்படி நாளை முற்பகல் 11.30 மணி அளவில் பிரம்மாண்டமாக நடத்த […]

அரசியல் இலங்கை செய்தி

நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல்: அவசர விவாதம் கோருகிறது எதிரணி!

  • May 6, 2026
  • 0 Comments

நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட இந்தப் பிரேரணையை, எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக தலைமையில் சென்ற குழுவில், பிரதி முதற்கோலாசான்களான ஜே.சி.அலவதுவல, அஜித் பி. பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அண்மைக்காலமாக […]

இலங்கை செய்தி

‘விஜய் இலங்கை வருவார்’ – நாடாளுமன்றத்தில் இன்று வெளியான தகவல்!

  • May 6, 2026
  • 0 Comments

“தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.” என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார். மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு புதிய உறவின் ஊடாக தீர்வை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் எம்.பி., இது தொடர்பில் கூறியவை வருமாறு , ” விஜயை இதுவரைகாலம் நடிகராக பார்த்த மக்கள் தற்போது தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் […]

உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: தெற்கு லெபனானில் கோரத் தாக்குதல்!

  • May 6, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 24 மணிநேரத்துக்குள் மாத்திரம் 25 இலக்குகள் தகர்க்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லெபனானின் பல நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவ கட்டமைப்புகளுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தியுள்ளார். லெபனான் தேசிய செய்தி நிறுவனம் […]

அரசியல் இலங்கை செய்தி

“மலையகத்துக்கு கூலிப்படை வேண்டாம்”: சபையில் மனோ காட்டம்

  • May 6, 2026
  • 0 Comments

‘நாம் நீலகாமம்’ பிரகடனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று (06) சபையில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு சமர்ப்பித்தார். நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் நேற்று அறவழி போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே இன்று பிரகடனம் அதிஉயர் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பெருந்தோட்டப் […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பாகிஸ்தான் அவதானம்!

  • May 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நஸீர் (Nayyar Naseer), இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது, இலங்கையில் அவரது தூதரகப் பதவிக்காலத்தை ஆரம்பிப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை, குறிப்பாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்துக் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்: திமுக சீற்றம்!

  • May 6, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிப்பது என்ற காங்கிரஸின் முடிவு திமுகவின் முதுகில் குத்தும் செயல் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்துள்ளார். ‘தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது. தொலைநோக்குப் பார்வை அற்றது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்காக அவர்கள் வருந்த நேரிடும்.’ எனவும் அண்ணாதுரை சுட்டிக்காட்டியுள்ளார். காங்கிரஸின் இந்த முடிவால் தேசிய மட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து […]

error: Content is protected !!