உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: வரி விதிப்பிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்

இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார்.

ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, தான் ஏற்கனவே அறிவித்திருந்த 20 சதவீத வரி (Tariff) விதிப்பிலிருந்து அவர் தற்போது பின்வாங்கியுள்ளார்.

“ஹார்முஸ் நீரிணையானது ஈரான் தவிர்ந்த அனைத்துக் கப்பல் போக்குவரத்திற்கும் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஈரானின் பொய் பேசும், வன்முறையான மற்றும் தீங்கிழைக்கும் தலைமையே இதற்குக் காரணம்.

இந்தத் தலைமை அந்த நாட்டை முழுமையான அழிவை நோக்கிய பாதையில் கொண்டு செல்கிறது” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த 20 சதவீத வரி விதிப்புக்கு பதிலாக, வளைகுடா நாடுகளுடனான “வர்த்தகம் மற்றும் முதலீட்டு” ஒப்பந்தங்களை தான் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி