அறிவியல் & தொழில்நுட்பம்

உலகில் முதல் முறையாக ரோபோக்களுக்கு பாடசாலை – சீனாவில் அசத்தல்

  • July 1, 2026
  • 0 Comments

உலகில் முதல் முறையாக ரோபோக்களுக்கான  பாடசாலையை சீனா திறந்துள்ளது. கிழக்கு சீனாவின் ஜெஜியாங் (Zhejiang ) மாகாணத்தில் உள்ள ஹாங்சோவில் (Hangzhou), மனித உருவ ரோபோக்களுக்கான முதல் பாடசாலை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலையில் தொழில்நுட்பம், செவிலியம், கலைகள் மற்றும் விளையாட்டு என நான்கு தனித்துவமான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ரோபோக்களின் ஒட்டுமொத்தத் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள காணொளி காட்சியில், பாடசாலை கழுத்துப்பட்டி (டை) அணிந்த ரோபோக்கள் , டேபிள் […]

பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) தொகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பேட்ரிக் ஹர்லி உலகம்

ஜப்பானில் பாடசாலையொன்றில் தீவிபத்து

  • June 19, 2026
  • 0 Comments

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் காயமடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாடசாலைக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து  300 மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் அவசரமாக வெளியேற்றியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அறிவிகக்ப்பட்டுள்ளது.

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு நாளைய தினம் சிறப்பு விடுமுறை!

  • May 14, 2026
  • 0 Comments

தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, ஹட்டன் கல்வி மண்டலத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நாளைய தினம் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்களின் பேரில் ஹட்டன் மண்டல கல்வி அலுவலகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ஹட்டன் கல்வி மண்டலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறையாக அறிவிக்குமாறு, அங்குள்ள அனைத்து முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற தேவைகளுக்காக நாளை பள்ளிக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் பிரபல பாடசாலையில் 40 மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்!

  • October 10, 2025
  • 0 Comments

பாதுக்க பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும்  40 மாணவர்கள் சுகவீனம் அடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவை உட்கொண்டபின் அவர்கள் சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உணவு ஒவ்வாமையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர்களில் 20 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 20 பேர் சிகிச்சை  பெற்று வருகின்ற நிலையில் அவர்களில் மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமோகாமா அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக […]