உலகம்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – 10 பேர் காயம்

  • July 19, 2026
  • 0 Comments

பெருவில் இன்று  5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஆண்டியன் பகுதியான ஜூனினில் (Junín) உள்ள சூபாக்கா (Chupaca) நகருக்கு அருகில், 24 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறித்த நிலநடுக்கம் பதிவாகி 17 நிமிடங்கள் கழித்து 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியாளர்கள் அவசர சேவைகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.