உலகம் செய்தி

12 ஆவது நாளாக தொடரும் போர்: 43 ஆயிரம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்!

  • March 11, 2026
  • 0 Comments

ஈரான்மீதான இஸ்ரேல், அமெரிக்க கூட்டு தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை மத்திய கிழக்கில் இருந்து 43 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர் என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை சிறப்புப் பணிக்குழுவைவொன்றை அமைத்திருந்தது. இதுவரை 30 ஆயிரம் பேருக்கு நேரடியாக இதன்மூலம் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் பல தனிவிமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பயணிகள் வணிகரீதியான விமானங்களையே பயன்படுத்தியதால் அவை குறைந்த அளவிலான பயணிகளுடனேயே […]

உலகம் செய்தி

ஈரான் ட்ரோன்களை வீழ்த்த உக்ரைன் இராணுவம்: புதிய திட்டம் வகுப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனரிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி Ukrainian President Volodymyr Zelensky தமது நாட்டின் இராணுவ வல்லுநர்களை வளைகுடா நாடுகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். ஆளில்லா விமானங்களைச் Drones சுட்டு வீழ்த்துவதில் தங்களுக்குள்ள தனித்துவமான அனுபவத்தைப் பகிரும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ரஷ்யாவுடனான நீண்டகாலப் போரின் மூலம் உக்ரைன் பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பத் திறன், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம் என்று அவர் கருதுகிறார். ஈரானின் அண்மைக்காலத் தாக்குதல்களுக்குப் பிறகு, இத்தகைய தற்காப்பு […]

இலங்கை செய்தி

“தேசியப் பொருளாதாரத்துக்கு வடக்கில் இருந்து 10 சதவீத பங்களிப்பு”

  • March 11, 2026
  • 0 Comments

“இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் N. Vedhanayakan. தெரிவித்தார். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் […]

அரசியல் இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயகொடியின் ‘தலை’ குறிவைப்பு: வருகிறது பிரேரணை!

  • March 10, 2026
  • 0 Comments

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் கையளிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் S.M. Marikar தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி SJP தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தது. அவ்வேளையில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த கெஹலியவை ஆதரிப்பது தவறு, மனசாட்சியின் பிரகாரம் மொட்டு கட்சியினர் வாக்களிக்க […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலையில் தேசியக் கொடியை இறக்கியவர் யார்?விசாரணை வேட்டை தீவிரம்!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் இன்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் அதிரடியாகக் கீழே இறக்கினர். அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது […]

இலங்கை செய்தி

தாக்குதல் பற்றி இலங்கைக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பியதா அமெரிக்கா?

  • March 10, 2026
  • 0 Comments

“இந்து சமுத்திரத்தில் ஈரான் போர்க்கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவால் இலங்கைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படவில்லை.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு, “தாக்குதல் நடத்திய தரப்போ அல்லது தாக்குதலுக்கு உள்ளான தரப்போ எமக்கு எவ்வித […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்: இலங்கையின் நிலைப்பாட்டுக்கு சுவிஸ் பாராட்டு!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார். இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில், இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற சமூக மற்றும் கலாசாரத் துறைகளின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளது […]

இலங்கை செய்தி

பொருளாதார கண்காணிப்புக்குழுவை நியமித்தது இலங்கை!

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமா கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ Anil Jayantha Fernando தலைமையில் இதற்குரிய குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர்,அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]

இந்தியா செய்தி

ஆயுத இறக்குமதியில் 2ஆம் இடத்தில் இந்தியா!

  • March 10, 2026
  • 0 Comments

உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் Stockholm International Peace Research Institute ஆய்வு அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையில் போர் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பதற்றமான சூழலே இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை குவிப்பதற்கு பிரதான காரணமென கூறப்படுகின்றது. கடந்த 2016- 2020 கால கட்டத்தை […]

இலங்கை செய்தி

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் திருகோணமலை பெண்ணுக்கு உயரிய விருது!

  • March 10, 2026
  • 0 Comments

திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த பாத்திமா ஸஜீஹா அமீனுக்கு Fatima Sajeeha Amin பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் (Houses of Parliament) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவின்போதே அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பெண்களின் சமூக மற்றும் அரசியல் மேம்பாட்டிற்காக அவர் ஆற்றி வரும் மகத்தான பணிகளைப் பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக LAS அமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் (Mutur) பகுதியில் ஒரு […]

error: Content is protected !!