காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியில் நெதன்யாகு அரசாங்கம்
இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டத்தை இரு வலதுசாரி அமைச்சர்கள் முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் ( Ben-Gvir) “தன்னார்வக் குடிபெயர்வு” மூலம் காசா மக்களை வெளியேற்றுவதற்கான ஏழாண்டுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த அரசாங்கத்தில் “குடிபெயர்வுக்குப் பொறுப்பான ஒரு அமைச்சகத்தை” உருவாக்க முயல்வதாகவும் அவர் கூறினார். அமைதி குறித்த மாயைகளுக்குப் பதிலாக, இப்போது குடிபெயர்வுக்கான நடவடிக்கைகள் தேவை,” என்று கூறிய […]





