உலகம்

பாகிஸ்தான் செல்லும் அமெரிக்க குழு!

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்க – இஸ்ரேல் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் இன்று (19) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணிப்பார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா எந்த அதிகாரிகளை அனுப்பும் என்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை. கடந்த வார இறுதியில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழுவினர் மேற்கொண்ட […]

உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் ஆரம்பம்

  • April 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் (J.D. Vance) உள்ளிட்ட குழுவினர் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர். ஈரான் சார்பாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தலைமையிலான குழுவினரும் இதில் கலந்துகொள்ளவதற்காக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உலகம்

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம்!

  • March 27, 2026
  • 0 Comments

உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நாடுகள் வரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir 2025 ஆம் ஆண்டுக்கான உலகக் காற்றுத் தர பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளதுடன், பங்களாதேஷ் மற்றும் தஜிகிஸ்தான் இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. வாகனப் புகை, கட்டுமானப் புழுதி, தொழிற்சாலைக் கழிவுகள், பயிர்க் கழிவுகளை எரித்தல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. உலகளாவிய ரீதியிலான 143 நாடுகளில் வெறும் 13 […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் நோக்கிச் சென்ற கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்!

  • March 25, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நோக்கி முறையான அனுமதி இன்றி பயணித்த ‘Selan’ என்ற கொள்கலன் கப்பல், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக நுழைய முயன்றபோது ஈரானிய கடற்படையினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டாங்சிரி தனது […]

உலகம்

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு எது தெரியுமா?

  • March 23, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான உலக பயங்கரவாதக் குறியீட்டின் (Global Terrorism Index) படி, உலகளவில் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக 1,139 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்தியா இப்பட்டியலில் 13 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

அபார வெற்றியீட்டிய இந்தியா – பாகிஸ்தான் படுதோல்வி

  • February 15, 2026
  • 0 Comments

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால்  அபார வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் […]

இலங்கை செய்தி

200 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை கையளித்தது பாகிஸ்தான்!

  • December 16, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் உதவிப் பொருட்களை பொறுப்பேற்றனர். பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார். பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து சுமார் 200 […]

உலகம்

05 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக லண்டனுக்கு விமான சேவையை ஆரம்பித்த பாகிஸ்தான்!

  • October 25, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் 05 ஆண்டுகளில் முதல் முறையாக பிரித்தானியாவிற்கு தனது சேவைகளை தொடங்கியுள்ளது. போலி விமானி உரிம ஊழல் தொடர்பாக விமான நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கராச்சியில் ஏற்பட்ட கொடிய விபத்தில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் விமானிகள் போலி உரிமங்களுடன் பறப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இங்கிலாந்திற்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 2024 ஆம் […]

உலகம்

எல்லையில் மோதிக்கொள்ளும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – தோஹாவில் (Doha) ஒன்றுக்கூடிய தலைவர்கள்!

  • October 18, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் (Afghan)மற்றும் பாகிஸ்தானுக்கு (Pakistan) இடையில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் மோதலை தவிர்க்க இரு நாட்டு பிரதிநிதிகளும் உடன்பட்டுள்ளனர். இதற்கமைய மோதலை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை கட்டாரின் தலைநகரமான தோஹாவில் (Qatari capital Doha) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் (Afghan) பிரதிநிதிகள் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஆகியோர் அடங்குவர் என்று தலிபான் (Taliban) அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல் பாகிஸ்தானை (Pakistan) பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்று சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யார் யார் சென்றார்கள் என்ற […]

உலகம்

48 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்!

  • October 15, 2025
  • 0 Comments

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அதன்படி, இன்று (15) பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு இந்த போர் நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் இந்த போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக தலிபான் நிர்வாகம் கூறுகிறது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நடந்து வரும் மோதல்களில் இதுவரை இரு தரப்பினரும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 200 […]