ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்லாமாபாத்துக்கு பயணம் – போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பெரும் குழப்பம்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி (Abbas Araghchi) இன்று இரவு இஸ்லாமாபாத் நகருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த தகவல் குறித்து ஈரான் அல்லது அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவோரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உரையாடிய சில மணி நேரங்களுக்குப் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பேச்சுவார்த்தையில் “போர் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள்” குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், அவர் குறிப்பிட்டது அமெரிக்கா–ஈரான் இடையேயான போர்நிறுத்தமா அல்லது லெபனான்–இஸ்ரேல் மோதல் தொடர்பானதா என்பதில் தெளிவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், இந்த பயணத்தின் நோக்கம் மற்றும் அதன் பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்களில் குழப்பம் நிலவுகிறது.





