உலகம்

குழந்தைகள் கண் முன்னே பெண் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண் ஒருவரை அவரது குழந்தைகள் முன்பே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பிரெஞ்சு சுற்றுலாப் பயணியின் காரில் பெட்ரோல் தீர்ந்த நிலையில், நள்ளிரவு வேளையில் அவதியுற்றுள்ளார்.

இதன்போது ​​அபித் அலி (Abid Ali) மற்றும் ஷத்கத் அலி (Shadqat Ali) ஆகியோர் அவரையும், அவரது குழந்தைகளையும் அருகில் உள்ள வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவருக்கும் பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இருப்பினும் குற்றவாளிகள் இருவரும் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக் கோரி  மேன்முறையீடு செய்திருந்தனர்.

அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களின் மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!