உலகம் செய்தி

குளோபல் சுமுத் கப்பல் இடைமறிப்பு: இஸ்ரேலுக்கு இத்தாலி கண்டனம் – குடிமக்களை உடனே விடுவிக்க கோரிக்கை

  • April 30, 2026
  • 0 Comments

சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த குளோபல் சுமுத் கப்பல் குழுவை  இஸ்ரேல் இடைமறித்ததை இத்தாலி கடுமையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில், குளோபல் சுமுத் கப்பல் குழுவின் கப்பல்கள் கைப்பற்றப்பட்டதை இத்தாலி கண்டிப்பதாகவும், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இத்தாலியர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு இஸ்ரேலை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, 24 இத்தாலியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இத்தாலி செய்தி நிறுவனம் ஏஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட […]

இந்தியா செய்தி

தேர்தல் முடிவுகள் வந்த பின் எப்படி செயற்பட வேண்டும் – விஜய் இட்ட கட்டளை

  • April 30, 2026
  • 0 Comments

தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் செயற்பட வேண்டிய விடயம் தொடர்பில் நடிகர் விஜய் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 02 சட்டமன்ற தொகுதிகளில் களமிறங்கியுள்ளார். தவெக தமிழ்நாட்டின் எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுயேட்சை வேட்பாளருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்தார். மே 4 ஆம் திகதி […]

ஐரோப்பா செய்தி

கோல்டர்ஸ் கிரீன் கத்திக்குத்து சந்தேகநபர் ‘பிரிவென்ட்’ திட்டத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டவர்

  • April 30, 2026
  • 0 Comments

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், முன்பு அரசின் தீவிரவாத எதிர்ப்பு திட்டமான ‘பிரிவென்ட்’ திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தவர் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அவர் அந்த திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதே ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த தாக்குதலில் 34 வயதான ஷ்லோய்ம் ராண்ட் மற்றும் 76 வயதான மோஷே ஷைன் ஆகிய இரண்டு யூத ஆண்கள் காயமடைந்தனர். புதன்கிழமை நடந்த இந்தச் […]

ஐரோப்பா செய்தி

கோல்டர்ஸ் கிரீன் தாக்குதல்: விரைவாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர்

  • April 30, 2026
  • 0 Comments

கோல்டர்ஸ் கிரீனில் நேற்று இடம்பெற்ற தாக்குதலுக்கு குற்றவியல் நீதி அமைப்பு விரைவாகவும் வெளிப்படையான முறையிலும் பதிலளிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங் தெருவில் குற்றவியல் நீதி அமைப்புகளுடன் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார். அதிர்ச்சியூட்டும் இத்தகைய தாக்குதல்களுக்கு துரிதமான பதில் அளிப்பது அதிகாரிகளின் கடமை என்றும் அவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நடவடிக்கைகள் வேகமாகவும் […]

இலங்கை செய்தி

யாழிலும், வன்னியிலும் மே தினம் நடத்துகிறது NPP

  • April 29, 2026
  • 0 Comments

  சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி , 21 மாவட்டங்களில் 21 மேதின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா மேற்படி தகவலை வெளியிட்டார். “மக்கள் ஆட்சிக்கு பலம்” எனும் தொனிப்பொருளின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கூறியவை வருமாறு, “கொழும்பில் இம்முறை பிரதான மேதின […]

இலங்கை செய்தி

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு

  • April 28, 2026
  • 0 Comments

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு விழாவில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க  ஜய ஸ்ரீ மகா போதி மரக்கன்றை உத்தியோகபூர்வமாக வழங்கினார். வன்முறையற்ற சூழல், கருணை, மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக்  கொண்டு இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பாத யாத்திரை கடந்த ஏப்ரல் 21 அன்று அனுராதபுரத்தில் ஆரம்பமாகி, தம்புள்ளை,  மாத்தளை, கண்டி, கேகாலை, யக்கலை மற்றும் களனி ஆகிய நகரங்கள் வழியாக சுமார் 07 நாட்கள் பயணித்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை இன்று […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய தூதரக விருந்தை நிறைவு செய்து புறப்பட்ட மன்னர்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானிய தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட  மன்னர் சார்லஸ் (Charles) மற்றும் ராணி கமிலா (Queen Camilla) தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும்  ஓய்வுபெற்ற பிரித்தானிய ஒலிம்பிக் நீச்சல் வீரர் டாம் டேலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக,  இன்றைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இதன்மூலம் நிறைவடைந்துள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா (Camilla) […]

ஐரோப்பா செய்தி

மன்னரின் வருகை – வெள்ளை மாளிகையில் அபூர்வ பாதுகாப்பு ஏற்பாடு

  • April 28, 2026
  • 0 Comments

மன்னர் சார்லஸ் (King Charles) வருகையை முன்னிட்டு, வெள்ளை மாளிகை (White House) சுற்றுவட்டாரத்தில் அபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாம் இதற்கு முன்பு அரிதாகவே இப்படியான கடுமையான பாதுகாப்பை கண்டுள்ளதாக செய்தியாளர் ஒருவர் கூறினார். வெள்ளை மாளிகைக்கு செல்லும் பென்சில்வேனியா அவென்யூவின் (Pennsylvania Avenue) ஒரு முழுத் தெரு போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்தது. அப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களின் அடையாள அட்டைகள் பொலிஸாரால் தீவிரமாகச் சோதிக்கப்பட்டன. இவ்வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாக மிக உயர்மட்ட […]

செய்தி

மே தினக் கொண்டாடத்திற்கான ஐ.ம.ச வின் அழைப்பை மறுத்த ஐ.தே.க 

  • April 28, 2026
  • 0 Comments

மே தினக் கொண்டாடத்தில் தங்கள் கட்சியுடன் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரள கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இம்முறை மே தினம் மே முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் வருவதால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளில்  ஈடுபடாமல் அதனை மத வழிபாடுகளுக்காக ஒதுக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மே முதலாம் திகதி பௌர்ணமி தினமாக அமையும் பட்சத்தில், […]

செய்தி

மெகசின் சிறைச்சாலை மோதல் சிறை அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

  • April 28, 2026
  • 0 Comments

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கும் சிறைக்காவலர் ஒருவருக்கும் இடையே நேற்று (27) முற்பகல் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக […]