அதிர்ச்சியில் சென்னை மக்கள் – அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 19 கிலோ கிராம் நிறையுடைய வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 990.50 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்த புதிய விலையின்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 990.50 ரூபாய் உயர்ந்து 3,237 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 14 கிலோ கிராம் நிறையுடைய வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே போர் காரணமாக ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையால் பல ஹோட்டல்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




