மோதல் தொடர்வதால் லெபனானில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை – உலக உணவுத் திட்டம்
இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், லெபனான் தற்போது மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொண்டு வருவதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள மிகவும் ஏழ்மையான, பலவீனமான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கி உதவி செய்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் நிலவும் உணவு நெருக்கடிக்கான உண்மையான தீர்வு போர் நிறுத்தமே என்றும், அந்நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை நிவாரண உதவிப் பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், லெபனானின் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம், உணவுப் பிரச்சினையை மேலும் மோசமாக்கி வருவதாகவும் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.




