யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து – 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் தீக்கிரை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், 60 சதவீதத்திற்கும் அதிகமான மருந்துகள் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளன. இந்தத் தீ விபத்து நேற்று இடம்பெற்ற நிலையில் அந்தப் பகுதியைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருமான சிறிபவானந்தராசா ஊடகங்களுக்கு இன்று இது குறித்துத் தெளிவுபடுத்தினார். தீயில் எரிந்த மருந்துகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான, பெறுமதிமிக்க மருந்துகள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வைத்தியசாலையின் உள்ளக மருந்தகத்தில் தற்போதுள்ள […]













