கருத்து & பகுப்பாய்வு

03 முஸ்லிம் நாடுகளின் சேர்க்கையால் மத்தியக் கிழக்கின் போர் மேகம் களையுமா?

  • August 8, 2026
  • 0 Comments

சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையேயான  பாதுகாப்பு ஒப்பந்தம்,  ஈரானைத் தடுக்கவும், நம்பகத்தன்மையற்ற அமெரிக்காவைச் சமன் செய்யவும், இஸ்ரேலுக்கு ஒரு செய்தியை அனுப்பவும் முயலும் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய கிழக்கு போர் நீடித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி, அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளிகளான மூன்று சக்திவாய்ந்த இஸ்லாமிய  நாடுகளை, ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலையும் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதும் நேட்டோ பாணியிலான ஒரு விதியுடன் பிணைக்கிறது. […]

உலகம்

மத்தியக்கிழக்கில் மோதல்கள் நிறைவுக்கு வர வாய்ப்பில்லை – அமெரிக்க உளவுத்துறை தகவல்

  • July 21, 2026
  • 0 Comments

ஈரானின் பேச்சுவார்த்தை நிலையை மாற்றுவதற்கோ அல்லது நடந்து வரும் மோதலைத் தணிப்பதற்கோ வாய்ப்பில்லை என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. ஈரான் தனது தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் ஜலசந்தியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலைத் தாக்கியுள்ளது. அதே நேரத்தில் அதன் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கடைசி நாள் வரை போராடுவோம் என்று சபதம் செய்துள்ளது. இந்நிலையிலேயே உளவுத்துறையின் தகவல் வந்துள்ளது. இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, கத்தார், எகிப்து, ஓமன் மற்றும் பாகிஸ்தான் […]

உலகம்

பயண எச்சரிக்கை புதுப்பிப்பு – மத்தியக்கிழக்கில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

  • July 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் அமெரிக்கர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் திருத்தப்பட்ட பயண எச்சரிக்கையை வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டது. அதில் “மத்திய கிழக்கில் நிலவும் அதிக பதற்றங்கள் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாகப் பதற்றம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன,” என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது அல்லது அதன் வழியாக வேறு நாடுகளுக்கு செல்வதை […]

உலகம் முக்கிய செய்திகள்

மத்தியக் கிழக்கில் புதிய பரிமாணத்தை எடுக்கும் மோதல் போக்கு – ஈரான் எச்சரிக்கை

  • July 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தால், தற்போதைய மோதல் “ஒரு புதிய பரிமாணத்தை எடுக்கும்” என்று ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அக்ராமியன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். டெலிகிராம் சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தப் போரை புதிய முனைகளுக்கு விரிவுபடுத்த ஈரான் நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் கூறினார். மேலும், ஈரானிய ஆயுதப் படைகளின் உண்மையான வலிமை மற்றும் திறன்களில் பெரும்பகுதி இன்னும் உலகிற்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றும் […]

உலகம்

மத்தியக்கிழக்கில் நிரந்தர அமைதி எப்போது நிலவும்? விரைவில் தீர்மானம்!

  • May 30, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். ட்ரம்பின் கொள்கைகளுக்கும், அமெரிக்காவின் நலன்களுக்கும் சாதகமான ஒரு முடிவையே ட்ரம்ப் எடுப்பார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தம் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் போர் நிறுத்தத்திற்கு ஏதுவான ஒரு ஒப்பந்தத்தை எட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விரு […]

இலங்கை

மத்தியக்கிழக்கில் நிலவும் மோதல் போக்கு தொடர்பில் இலங்கை கரிசனை!

  • May 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு மற்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இலங்கை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில்  வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில், இலங்கை சமூகம் உட்பட, இப்பிராந்தியத்தில் கணிசமான சர்வதேச புலம்பெயர் சமூகம் உள்ளது என்றும், அவர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, குடிமை உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய எரிவாயு விநியோகச் சங்கிலிகளின் […]