03 முஸ்லிம் நாடுகளின் சேர்க்கையால் மத்தியக் கிழக்கின் போர் மேகம் களையுமா?
சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம், ஈரானைத் தடுக்கவும், நம்பகத்தன்மையற்ற அமெரிக்காவைச் சமன் செய்யவும், இஸ்ரேலுக்கு ஒரு செய்தியை அனுப்பவும் முயலும் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய கிழக்கு போர் நீடித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி, அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளிகளான மூன்று சக்திவாய்ந்த இஸ்லாமிய நாடுகளை, ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலையும் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதும் நேட்டோ பாணியிலான ஒரு விதியுடன் பிணைக்கிறது. […]








