ஜூன் 17 அன்று எட்டப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த நீரிணை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாக்குதலை நிறுத்த ஈரான், அமெரிக்கா இணக்கம்

  • June 29, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை தொடர்பாக நிலவி வரும் மோதல்களை தற்காலிகமாக நிறுத்தவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் நடத்திய தாக்குதல்களால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராது என அஞ்சப்பட்ட நிலையில், இந்த முடிவு அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. “இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) அனைத்து அம்சங்கள் குறித்தும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளன. தற்போதைக்கு இரு நாடுகளும் தங்களது […]

தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாட்டை அவர் முழுமையாக எதிர்க்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. உலகம் செய்தி

‘சுதந்திர பாலஸ்தீனம் மலராது’- இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

  • June 28, 2026
  • 0 Comments

சுதந்திர பாலஸ்தீனம் உருவாவதற்கான வாய்ப்புகளைத் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். வரும் தேர்தல்களில் தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மத்திய தரைக்கடல் முதல் ஜோர்டான் ஆறு வரையிலான இடைப்பட்ட பகுதியில் இரண்டு தனித்தனி நாடுகள் அமைய இடமில்லை என்று அவர் அறிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாட்டை அவர் முழுமையாக எதிர்க்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. இஸ்ரேல் மக்கள் இது விடயத்தில் […]

ஜூலை 1 அன்று அட்லாண்டாவில் நடைபெறவுள்ள Round of 32 சுற்றில் அவர்கள் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளனர். செய்தி விளையாட்டு

காங்கோ அணி அசத்தல் ஆட்டம்: ஜுலை 1 இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

  • June 28, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை வரலாற்றில் காங்கோ DR Congo அணி பரபரப்பான மீள்வருகையை (Comeback) நிகழ்த்தி, முதல் முறையாக நாக்கவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. Yoane Wissa அடித்த 2 கோல்கள் மற்றும் Fiston Mayele அடித்த 1 கோல் ஆகியவற்றின் உதவியுடன், ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்ட உஸ்பெகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் காங்கோ வீழ்த்தியது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளைச் சந்தித்திருந்த போதிலும், உலகக் கோப்பைத் தொடரில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள உஸ்பெகிஸ்தான் […]

இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமனில் (0-0) முடிந்தது. செய்தி விளையாட்டு

36 தடவைகள் கைநழுவிய கோல் அடிக்கும் வாய்ப்பு

  • June 28, 2026
  • 0 Comments

மியாமி நகரில் நடைபெற்ற கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமநிலையில்  (0-0) முடிந்தது. ஏற்கனவே உஸ்பெகிஸ்தான் மற்றும் காங்கோ DR அணிகளைத் தோற்கடித்திருந்த கொலம்பியா, இந்தப் புள்ளியின் மூலம் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் போர்ச்சுகல் அணி இரண்டாமிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு […]

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. எனவே, புதிய சக்தி நாட்டில் தோற்றம்பெறாது. இந்த சக்தி தொடரும் என நம்புகின்றேன் அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி தொடரும்: வாசுதேவ ஆதரவுக்குரல்

  • June 28, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சட்டம் சிறப்பான முறையில் அமுலாகிவருகின்றது” – என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ நாட்டில் சட்டம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கம் பின்னடிக்கவில்லை. சுரேஷ் சலே விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். அவர் உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. ஏனெனில் உடல் பலவீனமடைந்தால் வழக்கு விசாரணையை முன்னோக்கி கொண்டுசெல்ல […]

கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன. உலகம் செய்தி

வெனிசுலாவில் 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்

  • June 28, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது. இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 51,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன. கடுமையான போக்குவரத்து நெரிசல் மீட்புப் பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியதை […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஈரான் என்ற நாடே இருக்காது’ – எச்சரிக்கை முழக்கத்துடன் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

  • June 28, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. நான்கு மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பிற்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை, மற்ற தரப்பு மீறிவிட்டதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தனது சமூக ஊடகப் பக்கத்தில், “நாம் நியாயமாக நடந்துகொள்ள முடியாத ஒரு கட்டம் வரலாம். […]

பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

போலந்தை நோக்கி நகரும் வெப்ப அலை – ஐரோப்பிய மக்கள் பரிதவிப்பு

  • June 27, 2026
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாகப் பல நாடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய மக்கள் இன்றைய தினமும் (27) கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டனர். பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வெப்ப அலை தற்போது போலந்தை […]

சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐரோப்பா செய்தி

உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: இருவர் பலி – பலர் காயம்

  • June 27, 2026
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நேற்று இரவு நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் Sumy பிராந்தியத்தில் ஒருவரும், Dnipropetrovsk பிராந்தியத்தில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், தென்கிழக்கு நகரமான Zaporizhzhia மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். வடக்கு உக்ரைனின் சுமி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது ரஷ்யா […]

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. இலங்கை செய்தி

இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு: முற்றுகைப் போராட்டத்தால் திருமலையில் பதற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரின் மரணத்திற்கு காரணமான அலட்சியப் போக்கைக் கண்டித்தே இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று (26-06-2026), இந்த நிலையத்தின் மூலம் ஆழ்கடல் நீச்சலுக்கு (Diving) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் இதன்போது அவருக்கு […]