உலகம்

ஈரானுக்கு முடிவுகட்டப்படும்: ட்ரம்ப் சூளுரை!

  • February 28, 2026
  • 0 Comments

“ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சூளுரைத்துள்ளார். ஈரான்மீது அமெரிக்காவும்,இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார். ஈரான் ஜனாதிபதி அலுவலகம், உச்சத் தலைவரின் வளாகம், புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு […]

அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பியினர் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர்: டில்வின் சில்வா தெரிவிப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

“ஜே.வி.பியினர் JVP இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர். அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம்.” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலர் டில்வின் சில்வா tilvin silva தெரிவித்தார். இந்திய வியாப்தவாதத்துக்கு எதிராக அன்று செயல்பட்ட ஜே.வி.பி, இன்று அந்நாட்டின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது என சில எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. ஜே.வி.பி. செயலாளரின் அண்மைய இந்திய விஜயத்தைக்கூட கடுமையாக விமர்சித்துவந்தன. இந்திய விரோத நிலையில் இருந்த உங்கள் கட்சி, தலைகீழாக மாறி, இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கத் தீர்மானித்துள்ளதாக பரவலாகக் கூறப்படுகிறதே என […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரிக்காக மொட்டு கட்சி காத்திருப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

“எமது ஆட்சியின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேசம்வரை சென்ற பேராயர் தற்போது மௌனம் காப்பது ஏன்? பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க கோரி அவர் வீதியில் இறங்காமல் இருப்பது ஏன்?” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi கேள்வி எழுப்பினார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் நடத்தப்பட்டது என்பதுபோலவே காண்பிப்பதற்கு கடந்த காலங்களில் தகவல் […]

அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபயவே அடுத்த இலக்கு: விமல் குற்றச்சாட்டு!

  • February 28, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை Gotabaya Rajapaksa கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார். ஓர் அங்கமாகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட சஹ்ரான் போன்ற ஒருவர், தீவிர சிங்கள பௌத்தராக அறியப்படும் கோட்டாபய […]

விளையாட்டு

வாழ்வா, சாவா? இலங்கையுடன் இன்று மோதுகிறது பாகிஸ்தான்!

  • February 28, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை Sri Lanka மற்றும் பாகிஸ்தான் Pakistan ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே, இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கே முக்கியத்துவம் பெறுகின்றது. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது. எனவே, […]

இலங்கை செய்தி

கச்சத்தீவு திருவிழா கோலாகலமாக ஆரம்பம்!

  • February 28, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, 2026 பெப்ரவரி 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நேற்று மாலை நடைபெற்ற விசேட வழிபாடுகள் மற்றும் கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான திருவிழா நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்தத் திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வான மகாத் திருவிழா கூட்டுத் திருப்பலி இன்று (28) காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த வருடாந்தப் பெருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை […]

இலங்கை செய்தி

“கச்சதீவில் தமிழக வெற்றிக் கழக கொடி”: இலங்கை இளைஞர்கள் செய்த செயல்!

  • February 28, 2026
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்துக்குச் சென்ற இலங்கைப் படகு ஒன்றில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ கொடி பறக்கவிடப்பட்டிருந்தமை அங்கு கூடியிருந்த இந்திய யாத்திரிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவில் திரண்டுள்ளனர். இதன்போது, இலங்கையிலிருந்து சிறிய படகு ஒன்றில் கச்சதீவுக்குப் பயணித்த சில இளைஞர்கள், நடிகர் விஜய்யின் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் […]

அரசியல் இலங்கை

நிலக்கரி மோசடி: நம்பிக்கையில்லாப் பிரேரணை கோருகிறது மஹிந்த அணி!

  • February 27, 2026
  • 0 Comments

“தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் துறைசார் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP வலியுறுத்தியுள்ளது. அநுராதபுரத்தில் இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மொட்டு கட்சி உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi இவ்வாறு வலியுறுத்தினார். “ தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் துறைசார் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அது தொடர்பில் நடைபெறும் வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க […]

இலங்கை செய்தி

03 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விடயங்கள் குறித்து விவாதம்!

  • February 27, 2026
  • 0 Comments

மார்ச் மாதத்துக்குரிய முதல் வார நாடாளுமன்ற அமர்வு 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதிவரை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதம் மார்ச் 04ஆம் திகதி நடைபெறும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்புவேளை மீதான […]

செய்தி

தமிழ்ச் செல்வன்மீது தாக்குதல்: சுரேஷ் சலேவுக்கு உளவு தகவல் கிடைத்தது எப்படி?

  • February 27, 2026
  • 0 Comments

“ சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயேதமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.” என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa. தெரிவித்தார். கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே விமல் வீரவன்ச மேற்படி தகவலை வெளியிட்டார். புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். “ அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுரேஷ் […]

error: Content is protected !!