இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்து வேட்டை!

  • February 27, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு( PSTA) என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மூன்றலில் இன்று (27) தபால் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்பாட்டில் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி வலியுறுத்தப்பட்டது. அத்துடன், புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் வரைவை கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது. மக்கள் தமது கையொப்பத்தை இட்டு, […]

இந்தியா செய்தி

இந்தியா, இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • February 27, 2026
  • 0 Comments

இந்தியா India மற்றும் இஸ்ரேல் Israel ஆகிய நாடுகளுக்கிடையில் 17 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரு நாடுகளினதும் பிரதமர்கள் முன்னிலையிலேயே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து மோடியும், நெதன்யாகுவும் இரு தரப்பு சந்திப்பின்போது தீவிரமாக ஆராய்ந்தனர். அதன்பின்னரே வேளாண்மை தொழில் நுட்பங்கள், செயற்கைக் கோள் தரவுகள், யுபிஐ பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேவேளை, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து, இந்தியா வருமாறு பிரதமர் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் பலி: மேலும் இருவர் காயம்!

  • February 27, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி கிராம பகுதிக்குள் இன்று (27) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை, மக்கள் குடியுருப்பு பகுதிக்கு சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. யானை தாக்கியதில் 75 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கின்றன. எனவே, தமது […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்: நீதி அமைச்சிடம் மகஜர் கையளிப்பு!

  • February 27, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது.” இவ்வாறுவலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் , பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபை முறைமை நீக்கப்படாது: டில்வின் சில்வா உறுதி!

  • February 27, 2026
  • 0 Comments

“மாகாண சபைகள் இருக்க வேண்டும். மாற்று தீர்வைக் கண்டுபிடிக்காமல் அவற்றை நாம் அகற்றமாட்டோம்.” – என்று ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார். தமது இந்திய பயணம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ இனப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு சரியான தீர்வை உருவாக்க வேண்டும் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தோம். மாகாண சபைகள் அந்த நோக்கத்திற்கு உதவவில்லை. சிறந்த தீர்வை […]

இந்தியா தமிழ்நாடு

தமிழக அரசியலில் பரபரப்பு: ஓ.பி.எஸ். தி.மு.கவுடன் சங்கமம்!

  • February 27, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முன்னாள் முதல்வாரன அ.தி.மு.கவின் AIADMK மிக முக்கிய தூணாக விளங்கிய ஓ.பன்னீர்செல்வம், O. Panneerselvam தி.மு.கவில் DMK இணைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் Stalin முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் இன்று சங்கமமானார். தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 ஆம் […]

ஆஸ்திரேலியா

கொலையில் முடிந்த சுற்றுலாப் பயணம்!

  • February 27, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் Thailand புகெட் Phuket தீவில் நடந்த மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். வீதியில் நடந்துசெல்லும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தாலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த 58 வயதான ஆஸ்திரேலியரே பிரஜை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்தார். தாக்குதலையடுத்து தப்பியோடிய துருக்கியை சேர்ந்த 29 வயது இளைஞன் தாய்லாந்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு தமிழரசுக் கட்சி முழு ஆதரவு!

  • February 27, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், அதற்கு மாற்றீடாகக் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் ITAK கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் M.A. Sumanthiran வலியுறுத்தியுள்ளார். இச்சட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களிலும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த முனைப்புடன் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமது நீண்டகாலக் கோரிக்கையாகும். இதனை […]

அரசியல் இலங்கை செய்தி

3 லட்சம் பேரை பணயக் கைதியாக வைத்திருந்தார் பிரபாகரன்: மஹிந்த அணி குற்றச்சாட்டு!

  • February 27, 2026
  • 0 Comments

“பிரபாகரன் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரை படையினர் காப்பாற்றினார்கள்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “இலங்கையில் போர் குற்றம், இனப்படுகொலை நடந்தது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு நடக்கவில்லை. பிரபாகரன்தான் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் […]

இலங்கை செய்தி

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்!

  • February 27, 2026
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று (27) வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திருவிழா ஏற்பாட்டுப் பணிகளுக்காகப் பங்குத்தந்தையர்கள், கடற்படையினர், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என 500 இற்கும் மேற்பட்டோர் கச்சதீவில் தங்கியிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். பக்தர்களின் வருகைக்காகப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், […]

error: Content is protected !!