இலங்கையில் தூக்குமேடை தயார் நிலையில்
அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால், அதனை நிறைவேற்றுவதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலையின் தூக்குமேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக இரு அலுகோசுகள் (Hangmen) தயார் நிலையில் உள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் மீண்டும் அவதானம் செலுத்தி வரும் பின்னணியிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, இந்த இரு அலுகோசுகள் வெலிக்கடைச் சிறைச்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தங்களது வீடுகளில் இருக்க […]













