ஜப்பான் முழுவதும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
ஜப்பான் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபுகுஷிமா மாகாணத்தின் இவாக்கி பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் கார் ஒன்று மூழ்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேநேரம் டோக்கியோவின் தெற்கே உள்ள நிஜிமாவில் Niijima, 24 மணி நேரத்திற்குள் 485 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜப்பான் வானிலை அலுவலகம் இசு தீவுத் தொடரின் சில பகுதிகளுக்கு மிக உயர்ந்த மண்சரிவு அபாய எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.
மேலும் கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.




