“பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம்”
2026 ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு விதியும் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்படி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் கலாநிதி அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த பின்னரே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு சட்ட விளக்கம் அளித்துள்ளது. பிரதம நீதியரசர் பி. பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய […]













