இலங்கை

இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் கைதான யாழ் தம்பதி

  • October 14, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேபாள பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்மாண்டுவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் கைது […]

இலங்கை

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி – இலங்கை அழைத்து வர நடவடிக்கை

  • October 14, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் எனக் கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கடுமையாகும் சட்டம் – வாகன ஓட்டுநர்களுக்கு கடும் நடவடிக்கை

  • October 14, 2025
  • 0 Comments

ஜெர்மனியில், வாகனம் மற்றும் சைக்கிள் ஓட்டும் போது கையடக்க தொலைபேசிகள், டெப், மடிக்கணினிகள் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் ஓட்டுநர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கட்டுப்பாட்டு நடவடிக்கை எனப்படும் வாரத்தையை ஜெர்மன் காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, விதிகளை மீறும் நபர்களுக்கு 100 யூரோ அபராதம் விதிக்கப்படும். காவல்துறையின் தகவலுக்கமைய, ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது ஒருசில விநாடிகள் கையடக்க தொலைபேசி திரையில் கவனம் செலுத்தினாலும், அது சுமார் 14 மீட்டர் தூரம் கண்மூடித்தனமாக பயணத்தை […]

ஐரோப்பா

உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியிடம் ஜெலென்ஸ்கி விடுத்த கோரிக்கை

  • October 12, 2025
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைதிக்கான மத்தியஸ்தராக செயல்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் செய்தது போல், உக்ரைனிலும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலில் ஜெலென்ஸ்கி இந்தக் கோரிக்கையை விடுத்ததாகக் கூறுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடிந்தால், அவர் நிச்சயமாக மற்ற போர்களை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி கூறினார். இதனிடையே, ரஷ்யா […]

ஐரோப்பா

போலந்தின் எல்லை மூடல்! ஐரோப்பிய ஒன்றியம் – சீனா வர்த்தகத்தில் பாதிப்பு

  • October 12, 2025
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் பெலாரஸுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சிகள் காரணமாக போலந்து பெலாரஸுடனான தனது எல்லையை மூடியதால் சீனா நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் பொருட்கள் இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கையாக எல்லை மூடப்பட்டதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், முழு பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே எல்லை போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையால் ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வருடாந்திர வர்த்தகம் 25 பில்லியன் யூரோக்கள் குறையக்கூடும் என்று ஐரோப்பிய பொருளாதார ஆய்வாளர்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் முதியோர்களின் பரிதாப நிலை – தம்மை பராமரிக்கக்கோரி தினசரி முறைப்பாடு

  • October 12, 2025
  • 0 Comments

இலங்கையில் தம்மை பராமரிக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 0707 89 88 89 எனும் வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சரண உதவிச் சேவையை தொடர்புகொள்ள முடியும் என செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் தெரிவித்துள்ளார். முறைப்பாடுகளை பரிசீலிப்பதற்காக பராமரிப்பு சபையொன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாடுகளை சமர்ப்பித்தவர்களுடன் விரைவில் பிரதேச செயலக அலுவலகங்களில் இருந்து […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானிய கடவுச்சீட்டில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்

  • October 11, 2025
  • 0 Comments

பிரித்தானிய கடவுச்சீட்டில் புதிய மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளின் முன்பக்கத்தில் மன்னர் சார்லஸின் சின்னமே இடம்பெறும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டின் பக்கங்களில் “அவரது மாட்சிமை” என்ற வாசகமும் இடம்பெறும். எனினும் தற்போதைய கடவுச்சீட்டின் அட்டைப்படத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சின்னமே உள்ளது. புதிய கடவுச்சீட்டுகளில் பிரித்தானியாவில் நான்கு பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பென் நெவிஸ் (Ben Nevis), லேக் டிஸ்ட்ரிக்ட் (Lake District), த்ரீ […]

உலகம்

தைவானின் நிலைமையை அளவிட சீனா பயன்படுத்தும் புதிய உத்தி

  • October 11, 2025
  • 0 Comments

தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை சீனக் கப்பல்கள் ஒளிபரப்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. போராய்வு நிறுவனமொன்றின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வகையான அறிவாற்றல் ஆக்கிரமிப்புகளுக்கு தாய்வானின் பதிலை மதிப்பீடு செய்யும் முயற்சியாக, சீனா இந்த போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக, பல சீன மீன்பிடிக் கப்பல்கள் தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. […]

உலகம்

அமைதி ஒப்பந்தம் அமுல் – மீண்டும் காஸாவுக்குத் திரும்பும் பாலஸ்தீனர்கள்

  • October 11, 2025
  • 0 Comments

காசாவில் போர் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனர்கள் மீண்டும் அங்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். போரினால் இருப்பிடத்தை இழந்த ஆயிரக்கணக்கான மக்களே இவ்வாறு தமது சொந்த இடங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் முதற்கட்ட உடன்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. அது பல பாலஸ்தீனர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. அதே சமயம் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலும் ஹமாஸும் அமைதி உடன்பாட்டை எட்டியிருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே […]

உலகம்

நோபல் பரிசை வெல்லும் கனவு தகர்ந்ததால் கடும் கோபத்தில் ட்ரம்ப்

  • October 11, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதமையால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகை கடுமையாக எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதாக நோர்வே நோபல் குழு நேற்று அறிவித்துள்ளது. இதனையடுத்து நோர்வே நோபல் குழு அமைதியை விட அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதை வெல்ல ஜனாதிபதி டொனால்ட் […]

error: Content is protected !!