திரைசேறி சர்ச்சை – நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் தற்கொலை செய்தமை உறுதியானது
மர்மமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், தற்கொலை என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட சட்ட மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது. நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியாகக் கைமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, நேற்று (30) தனது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது கை மற்றும் காலில் மூன்று வெட்டுக் […]













