உலகம்

சீனாவை தாக்கிய டால்பின் புயல் – கனமழை மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை

  • August 9, 2026
  • 0 Comments

இந்த ஆண்டு சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல புயலான டால்பின் புயல், இன்று மாலை (09) சீனாவின் கிழக்குக் கடற்கரையை அடைந்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டுவந்த இந்தப் புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறித்த கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவை அடைவதற்கு முன்பு, இந்தப் புயல் ஜப்பானின் தெற்கு ஒகினாவா மாகாணத்தைக் கடந்து சென்றது. அங்கு, ஆறு பேர் காயமடைந்ததாகவும், 50,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

இலங்கை

எல் நினோ நிகழ்வால் தீவிரமடையும் வானிலை – கனமழைக்கு தயாராகுமாறு எச்சரிக்கை

  • July 23, 2026
  • 0 Comments

இலங்கையில் எல் நினோ நிகழ்வு தீவிரமடைந்துள்ளதாகவும், அதன் உச்சம் முன்னர் கணிக்கப்பட்டதை விட முன்னதாகவே ஏற்படக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிகா படபெண்டி எச்சரித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்வு நவம்பர் மாதத்தில் அதன் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறினார். ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கை கடுமையான வறண்ட வானிலையை அனுபவிக்கக்கூடும் என்றும், அதே […]

ஐரோப்பா

கடும் வெப்ப அலையை தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழை – பிரான்ஸில் இருவர் பலி

  • July 17, 2026
  • 0 Comments

நீண்டகால வெப்ப அலையைத் தொடர்ந்து, பிரான்சில் நேற்றிரவு கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட்-விக்டர்னியனில் ( Saint-Victurnien) மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், டோலோமியூவில் (Dolomieu) மின்னல் தாக்கியதில் மற்றொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி திடீர் மழை காரணமாக 53,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தென்கிழக்கு பிரான்சில்  முன்னர் பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை மெட்டியோ-பிரான்ஸ் நீக்கியுள்ளது.

உலகம்

டெக்சாஸில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு – இருவர் உயிரிழப்பு

  • July 17, 2026
  • 0 Comments

டெக்சாஸில் பெய்த கனமழை மற்றும் வெள்ளநீரில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டதில்,   இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசரகால மீட்புப் பணியாளர்கள் 230 பேரை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடும் மழைப்பொழிவு காரணமாக 2,350 அவசரகால மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும்,   பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் விரைவுநீர் மீட்புப் படகுகள் உள்ளிட்ட 1,400 உபகரணங்களை பணியில் ஈடுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளதாவும் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott […]

உலகம்

ஜப்பானில் மின்விநியோகம் துண்டிப்பு : 9 பேர் பலி!

  • June 2, 2026
  • 0 Comments

ஜப்பானை தாக்கிய ஜாங்மி (Jangmi ) புயல் காரணமாக 09 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் புயல் காரணமாக, கியூஷுவில் (Kyushu) உள்ள மியாசாகி (Miyazaki) நகரில்  கிட்டத்தட்ட 400,000 குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ஒகினாவாவைத் தாக்கிய குறித்த புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் பரவலான மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் […]

உலகம்

சீனாவில் கனமழை : 24 பேர் உயிரிழப்பு!! மக்களுக்கு எச்சரிக்கை!

  • May 22, 2026
  • 0 Comments

சீனாவில் கனமழை தொடங்கியதிலிருந்து குறைந்தது 24 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். கடந்த செவ்வாயன்று 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹுபேய் (Hubei), ஹுனான் (Hunan)  மற்றும் குய்ஜோ (Guizhou) மாகாணங்களில் மேலும் பலர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணமான ஹுபேயில், அவசரகால மற்றும் இராணுவப் பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் சாலைகள் அழிவடைந்துள்ளதாகவும், தகவல் தொடர்பு […]