டெக்சாஸில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு – இருவர் உயிரிழப்பு
டெக்சாஸில் பெய்த கனமழை மற்றும் வெள்ளநீரில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவசரகால மீட்புப் பணியாளர்கள் 230 பேரை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழைப்பொழிவு காரணமாக 2,350 அவசரகால மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் விரைவுநீர் மீட்புப் படகுகள் உள்ளிட்ட 1,400 உபகரணங்களை பணியில் ஈடுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளதாவும் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott ) அறிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஓராண்டுக்கு முன்பு டெக்சாஸ் மாநிலம் இதுபோன்ற ஒரு மழைபொழிவையும், வெள்ளத்தையும் கண்டது. அப்போது 135 பேர் உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




