எத்தியோப்பியாவில் கோர விபத்து – 31 பேர் பலி!
எத்தியோப்பியாவின் வடக்கு அம்ஹாரா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெஸ்ஸி பகுதியிலிருந்து தலைநகர் அடிஸ் அபாபாவிற்குச் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் இல்லாததால், அவசரகால உதவிகள் தாமதமானதாகவும், இதனால் பயணிகள் பொது வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். […]




