ஐரோப்பா

மொஸ்கோவிற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் – குடியிருப்பு கட்டடம் சேதம்

  • July 28, 2026
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில்   பிராந்திய அளுநர் வோரோபியோவ் (Vorobyov) டெலிகிராமில் , உடைந்த ஜன்னல்களுடனும், மேல் தளங்களிலிருந்து கருப்புப் புகை எழுவதையும் காட்டும் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று செக்கோவ் நகர மேயர் மிகைல் சோபாகின்(Mikhail Sobakin) மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். அதேநேரம் போடோல்ஸ்க் (Podolsk), டொமோடெடோவோ (Domodedovo) மற்றும் கொலோம்னா (Kolomna) உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற பகுதிகளில் […]

ஐரோப்பா

ருமேனியாவை ஊடுருவிய மற்றொரு ட்ரோன் விமானம் – சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு

  • July 25, 2026
  • 0 Comments

உக்ரைன் எல்லையருகே, மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியில், தேசிய வான்வெளியை மீறிப் பறந்த இரண்டாவது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ருமேனியா  இன்று அறிவித்துள்ளது. முதலில் விழுந்த ஆளில்லா விமானம் ரஷ்யாவினுடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது ஆளில்லா விமானம், டானூப் டெல்டாவில்  (Danube Delta) உள்ள ஸ்ஃபான்டு ஜார்ஜேவிற்கு மேற்கே 10 கி.மீ (6 மைல்) தொலைவில்,  இன்று காலை 08.30 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காலை 8:22 மணிக்கு ரேடார் […]

ஐரோப்பா

UKவில் சிறை கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : புதிய ட்ரோன் கலாசாரத்தால் நெருக்கடி!

  • May 26, 2026
  • 0 Comments

போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சிறைகளில் போதைப்பொருள் வியாபாரிகள் தண்டனையின்றி செயல்படுவதாக பிரித்தானியாவின் சிறைச்சாலைகளின் தலைமை ஆய்வாளர் சார்லி டெய்லர்  ( Charlie Taylor) எச்சரித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025-இல்   இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் 48 போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது 2010-ஆம் ஆண்டில் இருந்ததை விட 2,300 ஆல் அதிகரித்துள்ளது. சிறைகளுக்குள் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதே இந்த அதிகரிப்புக்கு […]

ஐரோப்பா

எஸ்டோனியாவின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ட்ரோனால் பரபரப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

உக்ரைனில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ட்ரோன் ஒன்று எஸ்டோனியாவின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில், நேட்டோ படையினர் சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. பால்டிக் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர்  ( Hanno Pevkur) இன்று இந்த தகவலை வெளியிட்டார். மார்ச் மாதம் முதல் ரஷ்யாவை ஒட்டியுள்ள நேட்டோ உறுப்பு நாடுகளான பின்லாந்து, லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவின் வான்வெளிக்குள் பல உக்ரேனிய இராணுவ ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. மேலும், இந்த ஊடுருவல்களைக் கையாண்ட விதம் குறித்து லாட்விய […]

உலகம்

குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது அதிரடி தாக்குதல்

  • March 25, 2026
  • 0 Comments

குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் விமான நிலையத்தின் எரிபொருள் தாங்கி தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தொடங்கிய பிறகு குவைத் சர்வதேச விமான நிலையம் இலக்கு வைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் சர்வதேச விமான  நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் போர் தொடங்கிய காலத்திலிருந்தே இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குவைத்திற்கு வர வேண்டிய அனைத்து விமானங்களும் சவுதி அரேபியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.