ஐரோப்பா

UKவில் சிறை கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : புதிய ட்ரோன் கலாசாரத்தால் நெருக்கடி!

  • May 26, 2026
  • 0 Comments

போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சிறைகளில் போதைப்பொருள் வியாபாரிகள் தண்டனையின்றி செயல்படுவதாக பிரித்தானியாவின் சிறைச்சாலைகளின் தலைமை ஆய்வாளர் சார்லி டெய்லர்  ( Charlie Taylor) எச்சரித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025-இல்   இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் 48 போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது 2010-ஆம் ஆண்டில் இருந்ததை விட 2,300 ஆல் அதிகரித்துள்ளது. சிறைகளுக்குள் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதே இந்த அதிகரிப்புக்கு […]

ஐரோப்பா

எஸ்டோனியாவின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ட்ரோனால் பரபரப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

உக்ரைனில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ட்ரோன் ஒன்று எஸ்டோனியாவின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில், நேட்டோ படையினர் சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. பால்டிக் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர்  ( Hanno Pevkur) இன்று இந்த தகவலை வெளியிட்டார். மார்ச் மாதம் முதல் ரஷ்யாவை ஒட்டியுள்ள நேட்டோ உறுப்பு நாடுகளான பின்லாந்து, லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவின் வான்வெளிக்குள் பல உக்ரேனிய இராணுவ ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. மேலும், இந்த ஊடுருவல்களைக் கையாண்ட விதம் குறித்து லாட்விய […]

உலகம்

குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது அதிரடி தாக்குதல்

  • March 25, 2026
  • 0 Comments

குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் விமான நிலையத்தின் எரிபொருள் தாங்கி தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தொடங்கிய பிறகு குவைத் சர்வதேச விமான நிலையம் இலக்கு வைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் சர்வதேச விமான  நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் போர் தொடங்கிய காலத்திலிருந்தே இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குவைத்திற்கு வர வேண்டிய அனைத்து விமானங்களும் சவுதி அரேபியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.