மொஸ்கோவிற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் – குடியிருப்பு கட்டடம் சேதம்
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் பிராந்திய அளுநர் வோரோபியோவ் (Vorobyov) டெலிகிராமில் , உடைந்த ஜன்னல்களுடனும், மேல் தளங்களிலிருந்து கருப்புப் புகை எழுவதையும் காட்டும் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.
எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று செக்கோவ் நகர மேயர் மிகைல் சோபாகின்(Mikhail Sobakin) மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் போடோல்ஸ்க் (Podolsk), டொமோடெடோவோ (Domodedovo) மற்றும் கொலோம்னா (Kolomna) உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற பகுதிகளில் சில ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாயக்கிழமை அதிகாலை வரை 390-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் வீசப்பட்டதாகவும் அவற்றில் 81 ட்ரோன்கள் ரஷ்ய தலைநகருக்கு அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




