எஸ்டோனியாவின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ட்ரோனால் பரபரப்பு!
உக்ரைனில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ட்ரோன் ஒன்று எஸ்டோனியாவின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில், நேட்டோ படையினர் சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
பால்டிக் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் ( Hanno Pevkur) இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
மார்ச் மாதம் முதல் ரஷ்யாவை ஒட்டியுள்ள நேட்டோ உறுப்பு நாடுகளான பின்லாந்து, லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவின் வான்வெளிக்குள் பல உக்ரேனிய இராணுவ ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்துள்ளன.
மேலும், இந்த ஊடுருவல்களைக் கையாண்ட விதம் குறித்து லாட்விய அரசாங்கம் கடந்த வாரம் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




