குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்பு விழா: ஏற்பாட்டாளர் கைது
வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்படி உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன. இதன்போது, ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் […]













