போரால் உலகப் பொருளாதாரமும் பாதிப்பு: எகிறியது எரிவாயு விலை!
மத்திய கிழக்கை போர் மேகம் சூழ்ந்து குண்டும் மழை பொழியும் நிலையில், சர்வதேச சந்தையில் எரிவாயு விலை சடுதியாக அதிகரித்துள்ளது. கத்தார் உள்ளிட்ட நாடுகளின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளால் எரிசக்தி பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கத்தார் உலகின் முக்கிய எரிவாயு ஏற்றுமதியாளராக திகழ்வதால் அங்கு ஏற்படும் வணிகத் தடங்கல்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கக்கூடும். ஐரோப்பாவில் குளிர் காலம் முடிவுக்கு வந்திருந்தாலும் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ளதால் கோடை காலத்தில் சேமிப்பை நிரப்புவதில் சிக்கல் ஏற்படலாம் […]













