ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி சிறுமி கடத்தல்!

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் Alice Springs பகுதியில் பூர்வக்குடி முகாமில் இருந்து ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று Northern Territory காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

நேற்றிரவு முதல் காணாமல் போன அந்தச் சிறுமியைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஷரோன் கிரானைட்ஸ் என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் ஜெபர்சன் லூயிஸ் என்பவரைத் தேடி வரும் அதிகாரிகள், அவர் ஒரு முன்னாள் கைதியென தெரிவித்துள்ளனர்.

வான்வழி ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தன் குடும்பத்துடன் இருக்க வேண்டிய பிஞ்சுச் சிறுமியைப் பத்திரமாக மீட்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி