செய்தி விளையாட்டு

அபார வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறியது குஜராத்!

  • May 13, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 56-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதன் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. குஜராத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்றது. 169 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

பெரும்பான்மை நிரூபிப்பு: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

  • May 13, 2026
  • 0 Comments

தவெக அரசுமீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று (13) நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். அதில் 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ், திமுக கூட்டணியை முறித்து கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்தது. ஏனைய கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. இதன்மூலம் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

வெல்க தமிழ் ஈழம்: தமிழக சட்டமன்றத்தில் ஒலித்த குரல்!

  • May 12, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வின்போது “வெல்க தமிழ் ஈழம்” என வன்னி அரசு தெரிவித்த கருத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பான காணொளியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினராக சட்டரீதியாக உறுதியேற்ற பின்னர், சில கருத்துகளை முன்வைப்பார் வன்னி அரசு. இதன்போது “ வெல்க தமிழ், வாழ்க தமிழ் நாடு, வெல்க தமிழ் ஈழம், தந்தை பெரியார் வாழ்க, எழுச்சி தமிழர் வாழ்க” என உரத்து குரல் எழுப்பினார். வன்னி அரசு, விடுதலை […]

அரசியல் இலங்கை செய்தி

அநுரவின் உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு!

  • May 12, 2026
  • 0 Comments

மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான், ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர, உள்ளிட்ட 24 எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரபாகரனின் கதை முடிந்த மாதத்தில் மஹிந்த இலக்கு வைக்கப்படுவது ஏன்?

  • May 12, 2026
  • 0 Comments

“மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார். மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து மொட்டு கட்சியினர் திரண்டிருந்தனர். இதன்போதே மனோஜ் கமகே […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, பாகிஸ்தான் ஆராய்வு!

  • May 12, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் அவருடைய பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், இரு தரப்பினரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு கூட்டிணைப்பு […]

இலங்கை செய்தி

வவுனியாவில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி”! நீதிக்காக ஒலித்த குரல்!

  • May 12, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இறுதிப் போரின் வலிகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா நகரில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் வழங்கி நினைவேந்தலை ஆரம்பித்தனர். யுத்தத்தின் இறுதி நாள்களில் குண்டு மழைகளுக்கு மத்தியிலும், உணவின்றித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இந்தக் கஞ்சி எவ்வாறு ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. […]

இலங்கை செய்தி

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

  • May 12, 2026
  • 0 Comments

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தப் பவனி, இன்று காலை யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றப்பட்டு உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஊர்திப் பவனியானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பயணிக்கவுள்ளது. […]

இலங்கை செய்தி

“அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்” – ஜனாதிபதி

  • May 12, 2026
  • 0 Comments

“டித்வா” சூறாவளி நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 பில்லியன் ரூபா நிதியை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அப்பிரதேசங்களையும் மேம்படுத்துவதற்காகப் பயனுள்ள முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது அரசியல் அதிகாரத்தினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் அந்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மாத்தளை வீர கெப்பெட்டிபொல மண்டபத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, […]

இலங்கை செய்தி

மஹிந்தவிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை: நடந்தது என்ன?

  • May 12, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார். மஹிந்த ராஜபக்ச இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வந்தவேளை, அவருக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களும் வருகை தந்திருந்தனர். பின்னணி என்ன? […]

error: Content is protected !!