இலங்கை செய்தி

பெலருஸ் செல்கிறார் விஜித ஹேரத்!

  • May 12, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமையும் இந்த விஜயத்தின் போது, அவர் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான […]

இலங்கை செய்தி

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலிட பல நாடுகள் விருப்பம்!

  • May 12, 2026
  • 0 Comments

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய, சீன நிறுவனங்கள் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக துறைமுகங்கள். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டம், மத்தலவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை இயக்குவதற்கான விரும்பும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலங்கை அரசாங்கம் கேள்விப்பத்திரங்களைக் கோரியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையால் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆரம்பத்தில் […]

இந்தியா தமிழ்நாடு

மதுபானசாலைகளை மூட விஜய் உத்தரவு!

  • May 12, 2026
  • 0 Comments

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர்வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். மேற்படி ஆணைக்கிணங்க இந்த […]

உலகம் செய்தி

கொக்கைன் போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியாவின் முன்னாள் படை வீரருக்கு சிறை தண்டனை!

  • May 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பணியாற்றிய Jack Alex Cullen , கொக்கையின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணியாற்றியபோதே தன் சக படையினருக்கும், மற்றவர்களுக்கும் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்ததை அவர் ஒப்புக்கொண்டார். காவல்துறை நடத்திய சோதனையில், அவர் சுமார் $80,000 மதிப்புள்ள போதைப்பொருட்களை வாங்க முயன்றதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது சொந்தப் போதைப்பொருள் பழக்கத்திற்குத் தேவையான பணத்திற்காகவே இந்தக் குற்றங்களைச் செய்ததாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், அவர் சாதாரண நுகர்வோருக்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

பிரிட்டனுடன் இணைந்து ஈரானுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலியா!

  • May 12, 2026
  • 0 Comments

ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் வகையில், ஆஸ்திரேலிய அரசு ஈரானின் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரான் மக்களின் போராட்டங்களை வன்முறையான முறையில் ஒடுக்கியதற்காகவும், கட்டாய ஆடை கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதற்காகவும் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகள் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி சார்ந்த முடக்கங்களை உள்ளடக்கியதுடன், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கும் நிழல் வங்கி முறையையும் கட்டுப்படுத்த […]

உலகம் செய்தி

ஈரான் வலையமைப்பை முடக்க நடவடிக்கை: நபர்கள், நிறுவனங்கள்மீது தடை!

  • May 11, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு எதிராகத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஈரான் தொடர்புடைய 12 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியதாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் சதித்திட்டங்கள் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நிலையான தன்மையைச் சீர்குலைக்க முயன்றதை எதிர்த்து இந்த […]

இலங்கை செய்தி

யாழ். தையிட்டி வீதி விவகாரம்: மே 21 ஆம் திகதி தீர்ப்பு!

  • May 11, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும் என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி, தற்போது விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த வீதியை மீட்கும் நோக்குடன் கடந்த மாதம் 28 ஆம் திகதி அளவீடு செய்யப்பட்டது. வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்ற விகாராதிபதிக்கு பிரதேச […]

செய்தி

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு தமிழரசுக் கட்சி வலியுறுத்து!

  • May 11, 2026
  • 0 Comments

“நாட்டில் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளின் அதிகாரம் அதிகாரிகளின் பிடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல் மாத்திரமன்றி, […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு புத்தகம் வழங்கிய சீமான்!

  • May 11, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார். சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் […]

இலங்கை செய்தி

மீண்டும் வந்தாள் ‘யாழ் தேவி’!

  • May 11, 2026
  • 0 Comments

காலநிலை அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையிலான ‘யாழ். தேவி’ ரயில் சேவை, நான்கு மாத இடைவேளைக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.40 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட யாழ். தேவி ரயில், பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தச் சேவை ஆரம்பமானதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரயிலில் பயணிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. யாழ். […]

error: Content is protected !!