இலங்கை செய்தி

ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் தேசிய போர்வீரர்கள் தினம்!

  • May 18, 2026
  • 0 Comments

தேசிய போர்வீரர்கள் தினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை (19) கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இந்த நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு, இடம்பெறவுள்ளது என ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹன தெரிவித்தார். இந்த ஆண்டு நிகழ்வில், முப்படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், தேசிய கடெட் படையணியினர், மரணமான படையினரின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என, 2,700 பேர் வரை பங்கேற்பார்கள். […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின்; 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இன்று காலை 06:00 – 09:30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் இடம்பெறுகின்றன. முற்பகல் 10:15 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். முற்பகல் 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும். முற்பகல் 10:30 மணிக்கு இரண்டு நிமிட […]

ஆஸ்திரேலியா செய்தி

நடுவானில் பயங்கரம்: பணிப்பெண்ணைக் கடித்த பயணி!

  • May 17, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானத்தில், பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த விமானம் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டுத் தரை இறக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு நேற்று மதியம் குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் அங்கிருந்த ஊழியர்களிடம் மிகவும் மோசமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அவர் அங்கிருந்த விமானப் பணிப்பெண் […]

செய்தி விளையாட்டு

குஜராத்தை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

  • May 17, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய Kolkata Knight Riders அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 248 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய Gujarat Titans அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 […]

இலங்கை செய்தி

துப்பாக்கியுடன் உலாவந்த 10 பேர் திருமலையில் கைது!

  • May 17, 2026
  • 0 Comments

திருகோணமலை , கோமரங்கடவல-மல்போறுவ பிரதான வீதியில் துப்பாக்கியுடன் டொல்பின் வேனில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது. கோமரங்கடவல , பாணந்துறை மற்றும் அட்டுலுகம பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள் தூர இடங்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் எனவும் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக சென்றவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் […]

இலங்கை செய்தி

“தமிழக் கட்சிகள் ஒன்றிணையாவிடின் வடக்கு பிறபோகும்”

  • May 16, 2026
  • 0 Comments

“தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது.” – இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசு தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்கள் ஆதரவு குறைவதற்கு முன்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்தி, […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி பலி! போர் நிறுத்தத்துக்கு மத்தியில் பதற்றம்!!

  • May 16, 2026
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பின் மிக உயரிய இராணுவத் தளபதியான Izz al-Din al-Haddad , இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதனை ஹமாஸ் அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காசாவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் Izz al-Din al-Haddad உடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கு முக்கியக் காரணமானவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், இஸ்ரேலியப் படைகளால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு […]

செய்தி தமிழ்நாடு

“நன்மை மலரட்டும்” முதல்வரை சந்தித்தார் கமல்!

  • May 16, 2026
  • 0 Comments

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். தமிழக முதல்வருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன், சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக முதல்வர் தம்பி விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழகத்தை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் […]

செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு ‘ஐஸ்’: சீமானுக்கு ‘மிளகாய்’! தமிழகத்திலும் வேலை காட்டும் அர்ச்சுனா!

  • May 16, 2026
  • 0 Comments

தமிழக அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (16) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் தமிழ் மொழிச் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களும் […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகையை அகற்றியது பொலிஸ்!

  • May 16, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் கட்டப்பட்டிருந்த நினைவுப் பதாகையை பொலிஸார் அகற்றியுள்ளனர். சுப்பர்மடம் பகுதியில் எதிர்வரும் 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக, பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய, “மே 18 இனத்தின் வலி! மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!!” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை ஒன்றினை மக்கள் கட்டியிருந்தனர். இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் சிவில் உடையில் அங்கு […]

error: Content is protected !!