மறைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்னவிற்கு அஞ்சலி
மறைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்ன அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என திருகோணமலை ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) விஷயத்தை பூசை மற்றும் அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது. லக்ஷ்மி நாராயணன் ஆலய நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் அவரை நினைவு கூர்ந்து மலர் மாலை போட்டு விளக்கேற்றியதும் குறிப்பிடத்தக்கது.



