இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார். இலங்கை செய்தி

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

  • July 1, 2026
  • 0 Comments

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று பிற்பகல் (01) ஜனாதிபதி அலுவலகத்தில் கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தனவிடம் கையளித்தார். கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் ( நிறுவன விவகாரங்கள்) […]

குற்றப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை இந்த விசாரணையில் இருந்து நீக்குமாறு, சுரேஷ் சாலே தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார். இலங்கை செய்தி

‘விசாரணைகளில் திடீர் திருப்பம்’- கடவுச்சொற்களை வழங்குமாறு சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

  • July 1, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதிவாதி தரப்பால் முன்னர் செய்யப்பட்ட மனுக்கள் மீதும் நீதிவான் இன்று உத்தரவுகளை வழங்கினார். குற்றப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் […]

'டித்வா' சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீக்கம்

  • July 1, 2026
  • 0 Comments

‘டித்வா’ சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார். “டித்வா’ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனக் […]

இஸ்ரேல் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது மீண்டும் தாக்குதல் – இஸ்ரேல் எச்சரிக்கை

  • July 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் Israel Katz எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இருமுறை ஈரான் மீது ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தேவைப்பட்டால் மூன்றாவது முறையாகத் தாக்குதல் தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தூதரக முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், இஸ்ரேலிய சமூகங்களைப் பாதுகாக்க லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் […]

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு - ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் ஜுன் மாத பணவீக்கம் அதிகரிப்பு

  • July 1, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜுன் மாதத்துக்குரிய பணவீக்கம் அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு – ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரங்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், 5.5 வீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம், 1.3 வீதத்தினால் […]

A severe heatwave that has gripped Europe has killed more than 1,000 people in Spain, officials say. ஐரோப்பா செய்தி

வெப்ப அலை: ஸ்பெயினில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

  • July 1, 2026
  • 0 Comments

ஐரோப்பாவை வாட்டி வதைத்த கடுமையான வெப்ப அலையினால் ஸ்பெயினில் 1,000 இற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான முதல் ஆறு மாதங்களை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. இந்த வெப்ப அலையின் போது, வெப்பம் சார்ந்த உடல்நலப் பாதிப்புகளால் குறைந்தது 1,028 பேர் உயிரிழந்துள்ளதாக பொது Carlos III சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய வானிலை முகவாண்மையான ஏமெட் (Aemet) அமைப்பின் கூற்றுப்படி, ஸ்பெயினில் மிக வெப்பமான ஜூன் மாதமாக கருதப்பட்ட […]

சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் மீதான தனது நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

10 ஆண்டுகளுக்குள் மேலும் 45,000 சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த பிரித்தானியா திட்டம்

  • July 1, 2026
  • 0 Comments

சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் மீதான தனது நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் கூடுதலாக 45,000 சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் ஐக்கிய ராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தும் செயல்முறையை வேகமாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காக, அரசாங்கம் குடிவரவு அகற்றும் மையங்களின் கொள்ளளவை கணிசமாக விரிவுபடுத்துகிறது. நாடு கடத்தலுக்காகக் காத்திருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு சமூகத்தில் சுதந்திரமாகத் தடுத்து […]

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா செய்தி தமிழ்நாடு

அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் இருவர் தவெகவுடன் சங்கமம்

  • July 1, 2026
  • 0 Comments

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர், தகெவில் நாளை (02) சங்கமிக்கவுள்ளனர். இதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தத் தோல்வி அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், உட்கட்சிப் பூசலும் வெடித்தது. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து தனி அணியாக உருவெடுத்தனர். இதற்கிடையே, […]

கடந்த 40 ஆண்டுகளாக உலகக் கோப்பை Knockout சுற்றுகளில் மெக்சிகோவிற்கு இருந்து வந்த தொடர் தோல்விச் சாபம் முடிவுக்கு வந்துள்ளது. செய்தி விளையாட்டு

மெக்சிகோ அபார வெற்றி

  • July 1, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘சுற்று-32’ (Round of 32) ஆட்டத்தில், மெக்சிகோ அணி அஸ்டெகா மைதானத்தில், ஈக்வடாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளாக உலகக் கோப்பை Knockout சுற்றுகளில் மெக்சிகோவிற்கு இருந்து வந்த தொடர் தோல்விச் சாபம் முடிவுக்கு வந்துள்ளது. புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் தாமதமானது. எனினும், ஆட்டம் தொடங்கியதும் போட்டியை […]

பாலஸ்தீன நாடு அமைய இடமில்லை என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

காசாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றத் திட்டம்

  • July 1, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை என்பதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து வெளியேறும் “சுய விருப்ப இடப்பெயர்வு” என்ற கருத்தாக்கத்தை அவர் ஆதரித்துப் பேசியுள்ளார். இந்த நடவடிக்கையானது காசாவில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் இனச்சுத்திகரிப்பு முயற்சி என்று விமர்சகர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றனர். மேலும், போரினால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை […]