நியூசிலாந்தில் வலுவான நிலநடுக்கம் பதிவு – கட்டிடங்கள் குழுங்கியதால் பரபரப்பு
நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டீ அனாவு ( Te Anau) பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.
குறித்த நில அதிர்வை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் குழுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கமானது ஃபியர்ட்லாண்டிற்கான நுழைவாயிலாக விளங்கும் டீ அனாவுவிலிருந்து சுமார் 40 கி.மீ (25 மைல்கள்) வடக்கே மையம் கொண்டிருந்ததாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமை தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கடலோரப் பகுதிகளில் “வலுவான மற்றும் அசாதாரணமான நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத அலை எழுச்சிகள்” ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




