இந்த உரையாடலின் போது, இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா பறக்கிறார் நெதன்யாகு

  • July 3, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையில் இன்று தொலைபேசி வாயிலாக அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலின் போது, இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த முக்கிய சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த துல்லியமான திகதிஇன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் கமேனிக்கு இறுதி சடங்கு இடம்பெற்றும்வேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இந்தத் […]

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் உட்பட அறுவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கல்வி

குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்த மாணவரால் ஏற்பட்ட விபரீதம்

  • July 3, 2026
  • 0 Comments

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் உட்பட அறுவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை நேர முடிவின் பின்னர், குறித்த மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த வேளையில், சக மாணவர் ஒருவர் அங்கிருந்த குளவிக்கூட்டின் மீது கல் எறிந்துள்ளார். இதனால் கலைந்து வந்த குளவிகள், அங்கிருந்த மாணவர்களையும் பெண்ணொருவரையும் கொட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் வாலித் அல்-குரைஜி (Walid al-Khuraiji) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் (Ali Khamenei) இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். உலகம் செய்தி

அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்திய சவூதியின் உயர்மட்ட தூதுக்குழு

  • July 3, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் வாலித் அல்-குரைஜி (Walid al-Khuraiji) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் (Ali Khamenei) இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானிய ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் […]

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இலங்கை செய்தி

வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆனந்தசங்கரி

  • July 3, 2026
  • 0 Comments

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:- “இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்தசங்கரியைச் சந்திப்பதற்கான நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்திப்பின் போது, தனது நீண்டகால அரசியல் […]

இலங்கை செய்தி தமிழ்நாடு

ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரிடம் ஆவணம் கையளிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதுடன், ஈழத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணமொன்றும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவை இன்று […]

காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி முஹம்மது நயீம் ஜந்தியா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. உலகம் செய்தி

ஹமாஸ் தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி முஹம்மது நயீம் ஜந்தியா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 அன்று கடத்தப்பட்ட மூன்று இஸ்ரேலிய கைதிகளை இவர் ஒரு சுரங்கப்பாதையில் அடைத்து வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அந்த மூன்று கைதிகளும் பின்னர் இஸ்ரேலியப் படைகளாலேயே தவறுதலாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் Shujayea Battalion பிரிவின் ராணுவப் பாதுகாப்புத் தலைவரான ஜந்தியா, புதன்கிழமை (15) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் […]

லண்டனிலிருந்து வெளிவந்த ஒரு ஊடக அறிக்கையின்படி, 1950கள் முதல் 1970கள் வரை, திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டனர். ஐரோப்பா செய்தி

முறைப்படி மன்னிப்பு கோரி பிரித்தானிய பிரதமர்

  • July 3, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகளைக் கட்டாயத் தத்தெடுப்புக்கு உட்படுத்தியதில் அரசின் பங்கு குறித்து, பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் முறைப்படி மன்னிப்புக் கோரியுள்ளார். லண்டனிலிருந்து வெளிவந்த ஒரு ஊடக அறிக்கையின்படி, 1950கள் முதல் 1970கள் வரை, திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டனர். 185,000 தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்க வற்புறுத்தப்பட்டதாக ஊடக அறிக்கைகள் மதிப்பிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நேர்ந்தது நமது வரலாற்றில் ஒரு கறை […]

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் திகதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். செய்தி

அனிதா ராதாகிருஷ்ணன் கைது:கொந்தளிக்கும் திமுக உறுப்பினர்கள்

  • July 3, 2026
  • 0 Comments

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூராக பேசியமைக்காக திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் திகதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். இது குறித்து தவெக நிர்வாகிகள் ஆத்தூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் முன் பிணை கோரி […]

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கிய முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி, கூட்டு வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி கமேனி கொல்லப்பட்டார். உலகம் செய்தி

கமேனியின் இறுதிச்சடங்கு – பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

  • July 3, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள்ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என ஈரானின் அரசு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கிய முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி, கூட்டு வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது அடக்க சடங்குகள் தொடக்கத்தில் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், போர் நீடித்ததன் […]

ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு தீவிரம்

  • July 3, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜனவரி முதல் ஜுலை 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 57 ஆயிரத்து 668 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளிகள் பதிவாகிவருகின்றனர். ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் இருந்தாலும் மேல் மாகாணத்திலேயே நிலைமை மோசமாக உள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் 30 ஆயிரத்து 253 […]