குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்த மாணவரால் ஏற்பட்ட விபரீதம்
திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் உட்பட அறுவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை நேர முடிவின் பின்னர், குறித்த மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த வேளையில், சக மாணவர் ஒருவர் அங்கிருந்த குளவிக்கூட்டின் மீது கல் எறிந்துள்ளார்.
இதனால் கலைந்து வந்த குளவிகள், அங்கிருந்த மாணவர்களையும் பெண்ணொருவரையும் கொட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





