உலகம் செய்தி

சந்தேக நபரின் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ட்ரம்ப்!

  • April 26, 2026
  • 0 Comments

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படம் என்பவற்றை தனது சமூகவலைத்தள பக்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்க விழாவின்போதே இப்பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. “உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த ஆதாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளேன்.” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சந்தேக நபர் பொலிஸ் கண்காணிப்பின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

விளையாட்டு

37 பந்துகளில் சதமடித்த இளம் வீரர்: பறிபோனது வெற்றி!

  • April 26, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார். குறித்த போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தைத் தந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை விளாசிய அவர், வெறும் 36 பந்துகளில் சதம் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். மொத்தம் 37 பந்துகளைச் சந்தித்த […]

உலகம் செய்தி

வோஷிங்டனில் பதற்றம்: டொனால்ட் ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றம்

  • April 26, 2026
  • 0 Comments

வொஷிங்டனில் உள்ள ‘ ஹில்டன்’ ஹோட்டலில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹில்டன் விருந்தகத்தின் மண்டபத்திற்குள் “பெரிய சத்தம்” சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர். […]

உலகம் செய்தி

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. தனது பாகிஸ்தான் பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தி இருந்தார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்குரிய மத்தியஸ்த முயற்சியை பாகிஸ்தான் முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் […]

செய்தி

நாட்டு மக்களிடம் ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian அந்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு அழுத்தங்களால் நாட்டின் கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானை எல்லா வழிகளிலும் முடக்கி அதிருப்தியை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டே எதிரி நாடுகள் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்கா மட்டும் அல்ல மேலும் பல நாடுகள் ஈரான்மீது பொருளாதாரத் தடைகளை […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: நால்வர் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் பலியாகியுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் சென்ற ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது. தமது படை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தலைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ரம்மியமாக காட்சியளிக்கும் மருதானை ரயில் நிலையம் (படங்கள் இணைப்பு)

  • April 25, 2026
  • 0 Comments

மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. புகையிரத பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மருதானை புகையிரத நிலையத்தின் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகள் மாத்திரம் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பிரதான கட்டிடம் திருத்தப்பட்டதுடன், 05 மற்றும் […]

இலங்கை செய்தி

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இரண்டாக உடைந்தது லொறி: இருவர் படுகாயம்!

  • April 25, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர். மொனறாகலை வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு ஏற்றிவந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த சாரதியும், உதவியாளரும் லிந்துலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

உலகம் செய்தி

கடற்படை முற்றுகையை அமெரிக்கா கைவிடாவிட்டால் பதிலடி உறுதி: ஈரான் திட்டவட்டம்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்தால் அதற்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்க முந்தைய காலங்களை விட தற்போது தாங்கள் அதிக வலிமையுடன் இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை பகுதியைக் கண்காணித்து வரும் ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்திவருகின்றது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது […]

செய்தி

ஈரானில் 57 ஆவது நாளாக நீடிக்கும் இணைய முடக்கம்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் தற்போது எட்டு வாரங்களைக் கடந்து நீடிக்கிறது. 57 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது.