பதின்ம வயதினருக்கு வலைவீச்சி – UK வில் இருந்து நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்
சமூக ஊடகங்களில் தன்னை ஒரு பதின்பருவத்தினராகக் காட்டிக்கொண்டு, 13 வயது சிறுமியை தன்வசப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த புகலிடக் கோரிக்கையாளருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 28 வயதுடையவர் என நம்பப்படும் அப்துல் கான், என்ற புகலிடக் கோரிக்கையாளர் 2015-ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் பெண்களை தன்வசப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இவரால் பதின்மவயதுடைய சிறுவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு முன்பும் இவ்வாறான ஒரு […]





