நியூயார்க்கில் கடும் வெப்ப எச்சரிக்கை : அவசர இலக்கம் அறிமுகம்
நியூயார்க்கில் வெப்பநிலை 115 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மூன்று மாநிலங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெப்பநிலையுடன், புயல்களும் ஏற்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெப்பக் குறியீட்டு மதிப்புகள் 115F வரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல்நலக் குறைப்பாடுகள் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முடிந்தவரை குளிரூட்டப்பட்ட இடங்களில் நேரத்தைச் செலவிடவும், தங்களுக்கு அருகிலுள்ள குளிர்விக்கும் மையத்தைக் கண்டறியவும், வெப்பமான நேரங்களில் கடினமான செயல்பாடுகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் , வீடற்ற ஒருவரைக் கண்டால் 311 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.




