ஃபாக்லாந்தை உரிமைக் கோர பரிசீலிக்கும் அமெரிக்காவிற்கு பதிலடி!
அர்ஜென்டினாவின் பிராந்திய உரிமைகோரலை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக பென்டகனில் இருந்து கசிந்த ஒரு குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அர்ஜென்டினா ஒரு சுதந்திர நாடாக உருவாவதற்கு சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர்கள் அந்த தீவுக்கூட்டத்தில் கால்பதித்தனர்.
ஃபாக்லாந்தில் பிறந்த முன்னாள் அரசியல்வாதியான டெஸ்லின் பார்க்மேன் (Teslyn Barkman), னது சொந்த ஊர் “ஒரு உடைமையாகப் பேசப்படுவதைக்” கேட்பது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.
“இந்தக் கருத்து நேரடியாக டிரம்பிடம் இருந்து வந்ததா அல்லது வேறு யாராவது இதை முன்வைத்தார்களா என்பது ஒருபுறம் இருக்க, ஃபாக்லாந்து உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை இங்குள்ள மக்கள் அவருக்குக் காட்ட விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஃபாக்லாண்ட்ஸ் பிரித்தானியாவிற்கு சொந்தமானது என்பதை டவுனிங் தெரு உடனடியாக உறுதிசெய்தது.
தீவுவாசிகளின் சுயநிர்ணய உரிமை “கேள்விக்குரியதல்ல” என்றும், இந்த நிலைப்பாடு “தெளிவாகவும் தொடர்ச்சியாகவும்” கூறப்பட்டுள்ளது என்றும் அது மேலும் கூறியது.





