லண்டனில் பயங்கரம்: யூதர்கள்மீது கத்திக்குத்து தாக்குதல்!!
வடக்கு லண்டனில் யூத சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் யூத எதிர்ப்பு வன்முறைச்சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சூழலிலேயே இத்தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்களின் பின்னணியில் ஈரானியத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
மேற்படி தாக்குதல் சம்பவத்தை பிரிட்டன் பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது பற்றி தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.





