பொழுதுபோக்கு

மகள்களை நம்பி நாசமாய் போன சூப்பர் ஸ்டார்… இனி இப்படி செய்யமாட்டாராம்

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் லைகா தயாரிப்பில் கமிட்டானார் ரஜினி. அதன்படி லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்று நடித்தார்.

படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இருந்தாலும் ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்துவரும் வேட்டையன் படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அடுத்ததாக கூலி படத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையே ரஜினிகாந்தின் மகள்கள் இரண்டு பேருமே இயக்குநர்கள்தான். ஆனால் இதுவரை ஐஸ்வர்யா இயக்கிய 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களும், இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களும் படுதோல்வியை மட்டுமே சந்தித்திருக்கின்றன.

இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் ஒரு பெரிய வெற்றிக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் கொடுத்த வாய்ப்பையும் வீணடித்துவிட்டார்கள்.

இந்நிலையில் நடிகர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முக திறமை கொண்ட சித்ரா லட்சுமணன் இதுகுறித்து பேசுகையில், “சௌந்தர்யா கோச்சடையான் என்ற தோல்வி படத்தையே ரஜினிக்கு கொடுத்தார். ஐஸ்வர்யாவுக்கு வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியடைந்தன. அது நல்ல பாடத்தை அவருக்கு கற்றுக்கொடுத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதே தவறை தனது அப்பாவை வைத்து லால் சலாம் படத்தில் செய்தார். ரஜினியை கேமியோ ரோலில் நடிக்க வைத்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே ரஜினிகாந்த் இனி தனது மகள்கள் இயக்கும் படத்தில் கண்டிப்பாக நடிக்கமாட்டார். அந்தத் தவறை செய்யமாட்டார்” என்றார்.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content