ஐரோப்பா

பிரித்தானியா; பேருந்து கதவில் சிக்கிய பை … முன் சக்கரத்தின் கீழ் இழுபட்டு சென்ற மாணவி!

பிரித்தானியாவின் கார்லிஸ்லில் 14 வயது பள்ளி மாணவி பள்ளி பேருந்தில் கதவில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை 4:10 மணி முதல் 4:15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் லண்டன் ரோட்டில் உள்ள செர்ட்ஸி மவுண்ட் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பள்ளி மாணவி பஸிலிருந்து இறங்கும் போது அவருடைய பை பேருந்து கதவில் சிக்கி கொண்டுள்ளது , பேருந்து சாரதி மாணவி சிக்கி இருப்பதை கவனிக்காமல் பேருந்தை இயக்கியதில், மாணவி பேருந்தின் முன் சக்கரத்தின் கீழ் இழுபட்டு சென்றார்.

தகவல் அறிந்த உடனே அவசரகால சேவைகள் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.மாணவியின் கால் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கும்பிரியா காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content