பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.

சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது விருது வழங்கும் விழா அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெறுகிறது. 95வது ஆஸ்கார் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் க்ளோப் விருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக ஏஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வாங்கியிருந்தார், இதனையடுத்து தற்போது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்காக நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது, இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
பொழுதுபோக்கு

அரசியலுக்கு அத்திவாரம் போட்ட தளபதி : ஆடியோ லாஞ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!

  • April 23, 2023
தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 60 வீதமான படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதற்கிடையே

You cannot copy content of this page

Skip to content