இந்தியா

பஞ்சாப் – புனித நூலை கிழித்ததால் ஆத்திரம்… குருத்வாராவில் இளைஞர் அடித்துக் கொலை!

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள குருத்வாராவில், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பின் சில பக்கங்களைக் கிழித்ததாகக் கூறி 19 வயது இளைஞன் நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

பக்சிஷ்சிங் என்ற இளைஞர், குருத்வாரா வளாகத்திற்குள் நுழைந்து, புனித நூலின் சில பக்கங்களைக் கிழித்து விட்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் அவரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பக்சிஷ்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் சந்தர் சமிதியின் தலைவர் லக்வீர் சிங் பொலிஸில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 ஏ- பிரிவின் கீழ் பக்சிஷ்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாக்கப்பபடும் இளைஞர்

இதுதொடர்பாக பக்சிஷ்சிங் தந்தை லக்விந்தர் சிங் கூறுகையில், “எனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்காக இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். எனது மகனுக்கு எதிராக காவல் துறையின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. எனது மகனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுகூறினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அடித்துக் கொலை செய்யப்பட்ட பக்சிஷ்சிங் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருத்வாராவில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பஞ்சாப்பில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content