அடங்க மறுக்கும் இஸ்ரேல்: காசாவில் ஊழித்தாண்டவம்!
போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேல் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசாமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் கடந்த 2025 ஒக்டோபரில் போர்நிறுத்த ஏற்படுத்தப்பட்டது. எனினும், இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது.
இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரையில் 72, 600 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான இந்த வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.





